பிரபல நாட்டில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா..!

பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 246 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதையடுத்து பிரான்ஸில் 1 கோடியே 9 இலட்சத்து 21 ஆயிரத்தை 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1இலட்சத்து 24 ஆயிரத்து 809 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவந்துள்ளது.

பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 24 இலட்சத்து 60 ஆயிரத்து 799 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 333 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 515 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 83 இலட்சத்து 36 ஆயிரத்து 149 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.