மகளுக்காக எதையும் செய்ய துணிந்த தந்தையின் நெகிழ்ச்சியான செயல்

பிள்ளைகளுக்காக பெற்றோர் என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிவார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்தான்.

ஆனால், தென்மேற்கு ஒன்ராறியோவின் எசெக்ஸில் வாழும் Jeremy Markham (40), அதை நிஜமாக்கியிருக்கிறார்.

Markhamஉடைய மூன்று வயது மகள், வின்னிபெகில் உள்ள Blakely என்ற இடத்தில் தன் தாயுடன் வாழ்ந்து வருகிறாள். எசெக்சில் இருக்கும் தன் குடும்பத்தின் தேவைகளையும் கவனித்துக்கொண்டு, வின்னிபெகில் இருக்கும் மகளையும் சென்று பார்த்து வருவதற்கு அவரிடம் போதுமான பண வசதி இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் இரு முறை தன் மகளைக் காண்பதற்காக வின்னிபெகிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார் Markham. அதற்காக Markham, நாய்களின் கழிவுகளை அள்ளும் ஒரு வேலையைத் துவங்கியுள்ளார்.