மத்தி மீன் குழம்பு…. செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் மத்தி மீன் குழம்பை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்
மத்தி மீன் – 1/2 கிலோ
கறி மசாலா – 1
வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
மல்லி தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
சோம்பு -1 1 /2 ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
தேங்காய் – 1 /2 மூடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
முதலில் மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன், சோம்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிமசாலா போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதன் பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் மீன் சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போனவுடன் இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு ரெடி.