நாட்டில் 30,000 ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம்!

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் 30,000 ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.