கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறிவிப்பு!

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கான இரண்டு தடுப்பூசியைப் பெற்ற ஒருவர், 6 மாதங்களுக்குப் பிறகு, அவர் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டால், பூஸ்டர் தடுப்பூசியைப் போட பரிந்துரைக்க தொற்று நோய் பிரிவு முடிவு செய்தது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே இதனை தெரிவித்தார்.