யாழ்ப்பாணத்தில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் 2 வயது பெண் குழந்தை உட்பட வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (08) புதன்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 123 பேரிடம் மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் போது இவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள்தாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 32, 39, 59, 83 வயதுடைய பெண்கள் நால்வரும், யாழ். போதனா வைத்தியசாலையில் 2 வயது சிறுமி மற்றும் 28 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 59 வயது ஆண், 60 வயது பெண் இருவரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 27 வயது பெண் ஒருவரும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண் ஒருவருமாக கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.