எரிவாயு வெடிப்பு குறித்து ஆய்வு!

எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே நாட்டில பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இறுதி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலுவத்துவல கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.