யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதலில் முடிந்த மோதல்! 2 பேர் படுகாயம்!

யாழில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வாள் வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது.

இச்சம்பவம் இன்று (06) இரவு யாழ். நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தெரியவருகின்றது.

இந்த வாள்வெட்டு தாக்குதலில் 20, 21 வயது இளைஞர்கள் இருவரே காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.