எதிர்மறை எண்ணங்களை நீக்க உதவும் நாக முத்திரை..!

முத்திரைகள் என்பன கைகளில் ஏற்படும் சில அழுத்தங்களால் ரத்த ஓட்டங்களை சீராக்கும். இன்று நாம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும் நாக முத்திரை குறித்து பார்போம்.

நாக முத்திரை:

நேராக அமர்ந்து கொள்ளவேண்டும். வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து கொள்ளவும். இந்த முத்திரயை மார்பிற்கு நேராக வைத்து கொள்ள வேண்டும்.

பலன்கள்:

இந்த முத்திரையை செய்து வருவதால் மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். மனதில் வரும் எதிர்மறை எண்ணங்களை மறையும்.