அடுத்த ஆண்டு சந்தைக்கு வர இருக்கும் கூகுள் ஸ்மார்ட்வாட்ச்

கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கி வருவதாக 2018 முதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பின் 2019 வாக்கில் கூகுள் நிறுவனத்தில் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவுக்கான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ரோகன் எனும் பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வியர் ஓ.எஸ். புது வெர்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் சார்ந்த அம்சங்கள் பிட்பிட் ஒருங்கிணைப்பு மூலம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கூகுள் உற்பத்தி செய்யும் வாட்ச் பேண்ட்கள் வழங்கப்படலாம். கூகுள் ஸ்மார்ட்வாட்ச் விலை பிட்பிட் மாடல்களை விட அதிகமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.