பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிவிப்பு!

பிரிட்டனில் இனி கொரோனா ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை தொடர்ந்து இப்போது புதிய வைரஸ் பரவி வருவதனால் உலக நாடுகள் பெரிதும் அச்சத்தில் உள்ளது.

இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் வரும் ஜனவரிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் ஒமிக்ரான் வைரஸ்சுக்கு எதிரான ஆற்றலை உடலில் பெருக்கிக் கொள்ள சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் புதிய மாறுபட்ட வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை ஏற்படாது என்றும், அதேநேரம் மக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

மேலும் இங்கிலாந்து, அயர்லாந்து, வேல்ஸ், உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கட்டாயம் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார் தெரிவித்துள்ளார்.