நாட்டில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக விசேட வைத்தியர் திருமதி. மல்காந்தி கல்ஹென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் 745 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 563,265 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.