நான்கு வருடமாக தனது சிறுநீரை பருகும் பெண்

அமெரிக்காவில் கொலராடோவைச் சேர்ந்த கெர்ரி என்ற 53 வயது பெண் ஒருவர், நான்கு ஆண்டுகளாக தனது சிறுநீரை குடித்து வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நாள் ஒன்றிற்கு சுமார் 5 டம்ளர் சிறுநீரைக் குடித்துவரும் இவர், இந்த பழக்கம் சகஜமாகிவிட்டதாக கூறுவதோடு, இவரால் தற்போது சிறுநீர் குடிக்காமல் வாழ முடியாது என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது.

இந்த பழக்கம் குறித்த பெண் மெலனோமா புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்த போது குடிக்க ஆரம்பித்துள்ளார். சூடான சிறுநீரை குடித்தால் நிவாரணம் பெறுவதாக கூறியுள்ளார்.

மேலும் சிறுநீரை குடிக்கும் சோதனை குறித்து சில சிரமங்களையும் சந்திப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது கெர்ரி எதையாவது சாப்பிட்டால் அதில் சிறுநீர் வாசனை வருவதுடன் சில நேரங்களில் ஒயின் போல சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.