பாராஷுட்டில் பறந்த தம்பதிக்கு ஏற்ப்பட்ட சோகம்

இந்தியாவில் தீவு ஒன்றிற்கு சுற்றுலா சென்ற குஜராத் தம்பதிகள் பாராஷுட்டில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கயிறு அருந்து நடுக்கடலில் விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை Nagoa beach அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காட்சியில் மகிழ்ச்சியாக பாராஷுட்டில் பறக்க ஆரம்பித்த தம்பதிகள் சற்று உயரமாக சென்றுகொண்டிருந்த தருணத்தில் திடீரென கயிறு அருந்துள்ளது. இதனை அவதானித்த அங்கிருந்த நபர் ஒருவர் கூச்சல் போடுகின்றார்.

குறித்த தம்பதிகள் நடுக்கடலில் விழுந்த நிலையில், கடலோர காவல் படையினர் தம்பதியினரை தாமதிக்காமல் விரைந்து காப்பாற்றியுள்ளனர்.