மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் ஜவர் விபத்தில் சிக்கி பலி!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இந்நிலையில் தற்போது பிகார் லக்கிசராய் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த விபத்தில் 6 நபர்கள் மரணமடைந்துள்ளதாகவும் அதில் 5 பேர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.