சடலமாக மீட்கப்பட்ட நபர்: வெளியான புதிய தகவல்கள்!

வனவாசல பொசொன்வத்த பிரதேசத்தில் கடந்த 26 ஆம் திகதி அதிகாலை கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல அதிர்ச்சியுட்டும் விடயங்கள் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் புதுக்கடையை சேர்ந்த 40 வயதுடைய மொஹமட் இர்ஷாட் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

நண்பர்கள் சிலர் பணப் பிரச்சினை காரணமாக குறித்த நபரை கடத்திச் சென்று கிரேன்பாஸ் பிரதேசத்தில் வைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொஹமட் இர்ஷாடை கொலை செய்து வனவாசல பொசொன்வத்த பிரதேசத்திற்கு மோட்டார் வாகனம் ஒன்றில் கொண்டு சென்ற சந்தேகநபர்கள் சடலத்தை அங்கு வீசி விட்டு சென்றுள்ளனர்.

கொலை சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேலியகொடை குற்றப் பிரிவு மற்றும் களனி குற்றப் பிரிவு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய சிசிரிவி காட்சிகள் சிலவற்றை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.