நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாடி வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 மாத காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60,000 ஐக் கடந்துள்ளது.

இதில் இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.