மேலும் 21 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 81,417 பேர் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேல்மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளில் 1,390 வாகனங்களில் பயணித்த 2,653 பேர் பரிசோதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உரிய அனுமதிப்பத்திரம் இன்றி 128 வாகனங்களில் பயணித்த 201 பேர், சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்பட்டனர்.