யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மணல் கொள்ளை! சுமந்திரன்

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் யாழ்.வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளை இடம்பெற்றுவருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (A.M Sumanthiran) கூறியுள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டபோது எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்.வடமராட்சி கிழக்கில் நீண்ட நாட்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாகவும், ஒரு முறை எனது வாகனத்தில் வரும் போது கடத்தல்காரர்கள் என்னை கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருபாலும் சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது. சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் பொலிசாரிடம் தகவல் வழங்கும் போது, அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அவ்வாறு முறையிடும்போது மணல் கடத்தல்காரர்களிடமிருந்து பொலிசாரிடம் முடித்தவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவ்வாறு தான் தற்போதைய நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸாருடன் இணைந்து இந்த சட்டவிரோத மணல் கொள்ளை ஈடுபடுவது என்பது நிரூபனமாகின்றது. எனவே இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.