கனவுகளோடு கணவர் வீட்டிற்கு வந்த புதுப்பெண்: துடிக்க துடிக்க நடந்த கொடுமை!

திருமணமாகி பல கனவுகளோடு கணவர் வீட்டிற்கு வந்த பெண் ஒரு சில மாதங்களில் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவின் பல்வால் நகரில் பரிதாபாத்தில் வசிக்கும் பயோல் என்ற இளம் பெண் ஒருவர் சிஹோல் கிராமத்தில் வசிக்கும் ரவி என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார்.

மிகவும் மகிழ்ச்சியாக சில நாட்கள் கடந்து சென்ற நிலையில், கணவரின் தம்பி மூலமாக பிரச்சினை எழுந்துள்ளது.

கணவரின் சகோதரர் மற்றும் அவரின் மனைவி ,மாமியார் ஆகியோர் ஒன்று கூடி குறித்த பெண்ணிடம் மேலும் வரதட்சனையாக 2 லட்சம் ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

பெண்ணின் தந்தை திருமணத்திற்கு அதிகமாக செலவு செய்துவிட்டதால், தன்னால் இப்போது கொடுக்கமுடியாது என்று கூறவே, பெண்ணின் கணவரும், அவரது சகோதரரும் பெண்ணை அடித்து கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பின்பு கடந்த 4ம் திகதி கணவரின் சகோதரர் டோனி, அவரது மனைவி பூனம் மற்றும் தாய் பிஜேந்திரியின் ஆகியோர் மிகக் கொடூரமாக அப்பெண்ணை தாக்கியதுடன் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

பெண்ணின் இறப்பைக் கேட்டு கதறிய தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது தலைமறைவாகி இருக்கும் குடும்பத்தினரை தீவிரமாக பொலிசார் தேடி வருகின்றனர்.