வடமாகாணத்தில் மாத்திரம் பாடசாலைகள் திறப்பு!

எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் வடக்கில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட 680 பாடசாலைகள் வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும் என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அறிவித்திருக்கின்றார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆளுநர்களுடனான மெய்நிகர் இணைய வழி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். எனினும் திறப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பான விபரம்எதுவும் இதுவரை வெளியாகவில்லை.