கொய்யா பழத்தை முற்றாக தவிர்க்க வேண்டியவர்கள்

கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.

தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன.

இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாவை சாப்பிடலாம். மேலும் கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது.

நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.

தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.

இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள், இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.

வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது, குறிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது.

அதிகமாக கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலின் செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் பிரக்டோஸ் எனப்படும் ஒரு வகை சர்க்கரை, நாம் கொய்யாவை அதிகமாக சாப்பிடும் போது எளிதில் ஜீரணமாகாது.

மேலும் அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று சில சுகாதார ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் சிலபேருக்கு கொய்யா சாப்பிட்டாலோ அல்லது அதிக அளவு சாப்பிட்டாலோ சில நேரங்களில் வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சல் கொண்ட உணர்வு ஏற்படும்.

கொய்யாவில் உள்ள விதைகளால் இது நிகழ்கிறது. இந்த விதைகள் இருப்பது பழத்திற்கு அவசியம் என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சிலருக்கு ஒத்துக் கொள்ளாது.