வடகொரிய அதிபர் உறவை புதுப்பிக்க தென்கொரியாவுக்கு அழைப்பு

தென்கொரியாவுடனான தடைப்பட்ட தகவல்தொடர்பு வழிகளை மீட்பதற்கு வடகொரிய அதிபர் கிம்யொங் உன் (kim jong un) தெரிகொரியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்க இரண்டாவது நாளாக புதன்கிழமை கூடிய, நாட்டின் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றின் ஒரு உரையின்போதே கிம் (kim jong un) இதன‍ை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் அமெரிக்கா தனது “விரோத கொள்கையை” மாற்றாமல் பேச்சுவார்த்தைகளை முன்மொழிவதாக இதன்போது கிம் (kim jong un) குற்றம் சாட்டினார். இந்நிலையில் கிம்மின் இந்த அறிக்கை சியோலுக்கும் (தென்கொரியா) வொஷிங்டனுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தும் வெளிப்படையான முயற்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மாதம் பியோங்யாங் (வடகொரியா) சியோலுடன் ஆறு மாதங்களில் அதன் முதல் ஏவுகணைத் தாக்குதல்களுடன் நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மற்றும் அமெரிக்காவின் விமர்சனத்தையும் இது அதிகரித்தது.

இதேவேளை தென்கொரியா-அமெரிக்காவிற்கு எதிராக 2020 ஆகஸ்ட் தொடக்கத்தில் வட கொரியா தகவல் தொடர்புகளை துண்டித்த நிலையில் தற்பொழுது கிம் (kim jong un) மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.