மட்டக்களப்பில் கோர விபத்து…. ஒருவர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட கிராண்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்து சம்பவத்தில் மட்டக்களப்பு களுதாவளை பகுதியில்ச் சேர்ந்த 27 வயது இளைஞனே மரணமடைந்துள்ளார். dஇச்சம்பவம் குறித்து தெரியவருவது,

மட்டக்களப்பில் இருந்து சென்ற மோட்டார் சைக்களும், கல்முனையில் இருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.