அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக மிலிந்த ராஜபக்‌ஷ நியமனம்

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மையத்தின் பணிப்பாளரான மிலிந்த ராஜபக்ஷ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்

குறித்த நியமனக் கடிதத்தை வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அளகப்பெரும இன்றையதினம் (21) அமைச்சில் வைத்து வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க உள்ளிட்ட ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன இடம்பெற்றது.