கிளிநொச்சியில் உயிரிழந்த மூவருக்கு கொரோனா…

கிளிநொச்சியில் உயிரிழந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதலாம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த S.தம்பிராசா (வயது74 வயது), K.கஜிதரன் (37 வயது), அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கேசவன் (வயது 27) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.