இயக்குனர்களை உதாசீனம் செய்யும் நடிகர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர், தன்னை தேடி வரும் இயக்குனர்களை உதாசீனம் செய்கிறாராம்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர், ஒரு சில நல்ல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானாராம். அந்த படங்கள் வெற்றி பெற்றதால், தான் ஒரு பெரிய நடிகராக வளர்ந்து விட்டோம் என்று நினைக்க தொடங்கி விட்டாராம். மேலும் முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து விட்டதால், ரொம்ப பந்தா காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.

இந்நிலையில், நடிகரை தொடர்பு கொண்டு இயக்குனர்கள் தங்களுடைய கதைகளில் நடிக்க கேட்டால், அவர்களை உதாசீனம் படுத்துகிறாராம். கதை கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவர்கள் போனில் அழைத்தால், அழைப்புகளை எடுப்பதில்லையாம். நடிகரின் இந்த செயலைக் கண்டு பலரும் புலம்பி வருகிறார்களாம்.