இலங்கையின் விமான நிலையங்களுக்கு விடுக்கப்பட்ட தாக்குதல் எச்சரிக்கை குறித்து வெளியாகியுள்ள மற்றுமோர் தகவல்

பண்டாரநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வந்த தாக்குதல் குறித்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

என்ற போதும் உடனடி விசாரணையைத் தொடர்ந்து, அது தவறான எச்சரிக்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை மற்றும் பொய்யானவை என்றாலும், விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையினருடன் கொமாண்டோ மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும், விமான நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் ஜெனரல் G.A.சந்திரசிறி இந்த கூற்றுக்களை மறுத்துள்ளார்.

அத்துடன் விமான நிலையங்களில் அத்தகைய சூழ்நிலை எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.