புதுக்குடியிருப்பில் 13 பேர் மரணம்! வெளியான காரணம்!

கொரோனா தொற்று தாக்கத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசம் கடுமையான பாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இதுவரை கொரோனாவால் 13 பேர் உயிரிழந்தமை மக்களிடையே பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது கடந்த 3 நாட்களில் மாத்திரம் 04 மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதில் 34 வயதுடைய வாலிபர் ஒருவரும் உயிர் இழந்துள்ளார். மேலும் மக்களும் சமூகப்பொறுப்பற்று வீதி எங்கணும் தொடர்ந்து பயணிப்பதும் வர்த்தக நிலையங்களில் சனங்கள் திரளாக ஒன்று கூடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதைவிட நேற்று மட்டும் முல்லைத்தீவில் 53 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படட நிலையில் புதுக்குடியிருப்பில் மாத்திரம் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.