சொந்த வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி…

இலங்கையில் கடந்த வருடம் முதல் வாகனம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக விலையில் வாகனங்களை விற்பனை செய்வதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய பின்னர் லீசிங் நிறுவனங்கள் பாரிய வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போது இலங்கையில் உள்ள வாகனங்களை விற்பனை செய்யும் போது வாகனங்களின் நிறம், உற்பத்தி மற்றும் ஓட்டக்கூடிய தூரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட முறை ஊடாக குறைந்த விலையில் லீசிங் வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதன் ஊடாக சங்தையில் நிதியை நிலையாக வைப்பது மற்றும் பாரிய அளவிலான வாகன விலையை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த தீர்மானத்தை செயற்படுத்துவதன் மூலம் சந்தையில் தற்போது உள்ள வாகனங்களின் விலை குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைவடையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தொற்றினை தொடர்ந்து வாகன இறக்குமதிக்கு தடை விதித்தமையின் காரணமாக அரசாங்கத்தினால் 25000 கோடி ரூபாய் சேமிக்க முடிந்ததாக நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.