நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில், பொது மக்களின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மக்களின் செயற்பாடுகள் தமக்கு திருப்தியளிப்பதாகவும், அதற்காக தான் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் , வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை முழுமையாக மூடும் வகையில், முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவார்களாயின், நாடு முழுவதையும் பாதுகாப்பது சிரமமானது கிடையாது எனவும் இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டார்.