தபால் சேவை குறைந்தளவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

கோவிட் பெருந்தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் தபால் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட தபால் சேவையை வழங்குவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி வாரமொன்றில் நான்கு நாட்கள் மட்டும் தபால் சேவைகள் இடம்பெறும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சடுதியான உயர்வில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.