உடுவில் பகுதியில் 15 பேருக்கு கொரோனா; 5 பேர் மாணவிகள்

யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

அவர்களில் 16 வயதுடைய மாணவிகள் ஐந்து பேர் உட்பட 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 16 வயதுடைய ஐந்து மாணவிகளும் சேர்ந்து கல்விகற்பவர்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.