கைதான ஆசிரியர்களை சந்திக்க சென்ற சஜித்தை வழிமறிப்பு செய்த பொலிஸ்!

கொழும்பில் நேற்றையதினம் கைதான ஆசிரியர்கள், அதிபர்கள் 44 பேர் தற்போது தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை சந்திக்க சென்ற எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினரை பொலிஸார் தடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினர், தடுப்பில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்க துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றனர்.

இதன்போது அவர்களை வழிமறித்த பொலிஸார், ஆசிரியர்கள், அதிபர்கள் சந்திக்கவிடவில்லை. மாறாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர்கள் பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.