இன்றைய ராசிபலன்கள் (05.08.2021)

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஆகஸ்ட் 5-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு……

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். முயற்சிகள் சாதகமாகும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட, மற்றவர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் நாள். உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களால் திடீர் செலவுகளும் ஏற்படும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபட, சிரமங்கள் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவினர் களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் சற்றுச் சங்கடத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். துர்கை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவினர் களால் செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

கடகம்
கடக ராசி அன்பர்களே!

தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். சக வியாபாரிகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மற்றவர்களு டன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். முயற்சிகள் அனுகூலமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட, தடைகள் விலகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி
கன்னி ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். முருகப் பெருமானை வழிபட, நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முக்கிய முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்
துலா ராசி அன்பர்களே!

பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட, பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சியைத் தொடங்க உகந்த நாள்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் இழுபறியாகும். குடும்பத்தினர் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டாலும் பெரிது படுத்தவேண்டாம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்புகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஆறுமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு
தனுசு ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். வியாபாரத் தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். தட்சிணா மூர்த்தியை வழிபட முக்கிய முடிவுகள் சாதகமாகும்,

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சகோதரர்களிடம் அனுசரணை யாக நடந்துகொள்ளவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மகரம்
மகர ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். வாழ்க்கைத்துணை நீண்டநாள்களாக கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் குடும்பத்தினருடன் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மீனம்
மீன ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் மேலோங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சியும் உற்சாகமும் கிடைக்கும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். இன்று விநாயகரை வழிபட, நன்மைகளைக் கூடுதலாகப் பெறலாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உறவினர்களிடம் இணக்க மாக நடந்துகொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.