சீனர்களை நம்பும் ஸ்ரீலங்கா அரசு தமிழர்களை நம்பவில்லை….

சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீளவேண்டும் என்றால் சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, எமது முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து, புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள புத்திசாலி சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.

நாட்டின் நெருக்கடி நிலைமையில் இருந்து மீளும் விதத்தில் கைகொடுக்க எமது மக்கள் தயாராகவே உள்ளனர் என்பது அரசாங்கத்திற்கும், சிங்கள புத்திசாலி மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை, அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது.

எனவே சிங்கள புத்திசாலி மக்களை தமிழ் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நாட்டின் நெருக்கடி நிலையில் இருந்து மீள ஒரே வழிமுறையாகும் என்றார்.