அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஜனாதிபதி தலைமையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்…. வெளியான தகவல்!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே ஆளுங்கட்சி எம்.பிக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடைபெற்றிருந்தது.

இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாளைய தினம் மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.