சிவகார்த்திகேயன் பட டைரக்டர் பெயரில் மோசடி

இயக்குனர்கள் பெயர்களிலும் இதுபோல் போலி கணக்குகள் தொடங்கி நடிக்க வாய்ப்பு அளிப்பதாக சொல்லி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று நடிகர்களும் இயக்குனர்களும் ரசிகர்களை எச்சரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இயக்குனர் பொன்ராம் பெயரிலும் பண மோசடி நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது சசிகுமார் நடிக்கும் எம்.ஜி.ஆர். மகன் படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

மோசடி குறித்து டைரக்டர் பொன்ராம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “என் பெயரில் போலியாக பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கப்பட்டு சிலர் பணம் கேட்பதாக அறிந்தேன். யாரும் நம்ப வேண்டாம். பரிச்சயமான விவரமின்றி வரும் அழைப்புகளை ஏற்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.