வடக்கில் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள்…. வெளியான தகவல்!

பிரதான மார்க்கங்களில் திருத்த மற்றும் பராமரிப்பு பணிகளிற்காக நாளை (10) சனிக்கிழமை வடமாகாணத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் பிரதேசங்களின் விபரங்களை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, யாழ் மாவட்டத்தில்- ஏ.வி.வீதி கொழும்புத்துறை, கொழும்புத்துறை வீதி- நெளுக்குளம் வீதி, கொழும்புத்துறை வீதி சுவாமியார் சந்தி, மணியந்தோட்டம், பழைய பூங்கா வீதி, கொழும்புத்துறை வீதி சந்தி, பாசையூர், பாசையூர் ஈச்சமோட்டை வீதி, பெரிய கோயில், புங்கங்குளம் கொழும்புத்துறை வீதி சந்தி, உதயபுரம், மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை,

வடமராட்சியில்- நெல்லியடி எச்.என்.பி, இரும்பு மதவடி, காளிகோவிலடி, கரணவாய், மனோகரா அல்வாய், மத்தொனி, முடக்காடு, நாவலர்மடம், நெல்லியடி – பருத்தித்துறை வீதி, நெல்லியடி கொடிகாமம் வீதி, சக்கலாவத்தை, சித்திவிநாயகர் பாடசாலை, தேவரையாளி, திக்கம் – நெல்லியடி வீதி, திருமகள் சோதி வீதி, தூதாவளை, வதிரி- உடுப்பிட்டி பருத்தித்துறை சந்தி வீதி, வதிரி அரசடி வீதி, விக்னேஸ்வரா கரவெட்டி வீதி, நெல்லியடி இலங்கை வங்கி, கார்கில்ஸ் நெல்லியடி, ரூபின்ஸ் மருத்துவமனை, தொலைத் தொடர்பு மாலுசந்தி, அட்டகிரி, மூத்த விநாயகர் கோயிலடி,

நவாலி, கலையரசி வீதி நவாலி, சென்பீட்டர்ஸ் வீதி நவாலி, வேலக்கை பிள்ளையார் நவாலி.

கிளிநொச்சி மாவட்டத்தில்- சாந்தபுரம், இராணுவ ஆதார வைத்தியசாலை இரணைமடு, புதூர் கோயிலடி, புதூர் கோபுரம், புதூர் கிராமம்.

வவுனியா மாவட்டத்தில்- அவஹந்துலாவ ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.