இலங்கையில் ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி…!

நாட்டில் சகல பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை 12ம் திகதி ஆரம்பிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்திருக்கின்றது.

நாடுமுழுவதும் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் வயதுக் கட்டுப்பாடின்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.