பிரபல இயக்குனரின் மகன் விபத்தில் உயிரிழப்பு: ஆறுதல் தெரிவித்து வரும் பிரபலங்கள்

பிரபல இயக்குனரின் மகன், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சூர்யோதே பெரம்பள்ளி. இவரின் மகன் மயூர்(20), இருசக்கர வாகனத்தில் சென்ற போது டேங்கர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மயூர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கன்ன திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரபல இயக்குனரான சூர்யோதேக்கு தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.