சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து! டிப்பர் சாரதிக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்.சாவகச்சோி – மீசாலை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பேருந்து சாரதி பேருந்தை நிறுத்திவிட்டு சாப்பாட்டு கடைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது,

இதயைடுத்து பேருந்து உயர் அழுத்த மின்சார கம்பதுடன் மோதியதில், கொடிகாமம், மீசாலை, எழுதுமட்டுவாள் பகுதிகளில் மின் விநியோகம் உடனடியாக தடைப்பட்டது.

இதனையடுத்து காயமடைந்த டிப்பர் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.