யாழில் நீடிக்கும் அபாயம்: மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடம் அகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேருக்கும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 02 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.