திருமணத்துக்கு பின் உடல் நலமில்லை என கூறி கணவனிடமிருந்து விலகி இருந்த மனைவி! மருத்துவ பரிசோதனையில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…

இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவி ஒரு திருநங்கை என்பதை அறிந்து கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் அதே மாவட்டத்தின் பான்கி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி திருமணம் செய்துள்ளார்.

வழக்கம் போல அது எல்லோரும் திருமணம் செய்யும் திருமணம் போல இருந்துள்ளது.

இந்நிலையில் திருமணமத்திற்கு பிறகு கணவன் மனைவியுடன் சேர்ந்து இருக்க பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் மனைவி தனக்கு உடல் நிலை சரியில்லை என ஒவ்வொரு முறை அவர் முயற்சி செய்யும் போதும் ஒவ்வொரு காரணம் சொல்லி விலகி சென்றிருக்கிறார்.

இதற்கிடையில் இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் துவங்கும் போது கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தனது மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்று தனது அனுபவத்தையும், தனது சந்தேகேத்தையும் கேட்டுள்ளார்.

அவரது மனைவியை பரிசோதனை செய்து பார்க்கும் போது தான் விடயமே தெரிந்தது. அவரது மனைவி ஒரு பெண்ணே அல்ல அவர் ஒரு திருநங்கை என தெரியவந்தது.

இதை கேட்டு கணவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் கணவர் தன் மனைவி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பொலிசாரிடம் இவர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.