நடிகையுடன் ரகசிய வாழ்க்கை… ! கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு,…. வெளியான தகவல்!

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலமுறை கட்டாய கருகலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2-ந் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், வழக்கில் ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நண்பர் பரணி முன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையும் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.