ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!

அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு டெப் அல்லது கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய நிவாரண அடிப்படையில் கடனுதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஆராயப்படவுள்ளது.

இது குறித்து அரச வங்கிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொவிட் தொற்றுக்கு மத்தியில் மாணவர்களுக்கு இணைய வழியான கல்வியை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இதன் கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.