இந்தியாவில் கணவன் ஒருவர் மாந்திரகவாதியை அழைத்து மனைவியை அவருக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் மீரூட் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன போதும், கணவர் இல்லாத காரணத்தினால், இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஒரு கட்டத்தில், கணவர், தன்னுடைய நண்பரும், மாந்தீரிகவாதியுமான இஸ்மாயில் என்பவரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். உடனே இஸ்மாயில் தான் இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பத்தாக கூறியுள்ளார்.
அதன் படி சில தினங்களுக்கு முன்பு, இஸ்மாயில் தம்பதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இஸ்மாயில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது, கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நேரத்தில், இஸ்மாயில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் கூச்சலிட்ட போதும், வெளியில் இருந்த கணவன் கதவை திறக்கவேயில்லை.