இத செஞ்சா…வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்! அழகிய காதல் ஜோடி செய்து வந்த மோசமான செயல்!

தமிழகத்தில் அழகிய இளம் ஜோடி குறுக்கு வழியில் சம்பாதிக்க செய்த செயலால், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோயமுத்தூர் மாவட்டம் காந்தி மாநகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். 21 வயதான இவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்,

வினோதினி கோயமுத்தூரில் நர்சிங்க படிக்க கல்லூரி வந்த போது, சூர்ய பிரகாஷின் நட்பு கிடைக்க அது நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் மாணவி படிப்பு முடிந்ததும் விருதுநகருக்கு செல்லாமல் காதலருடன் சுற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் காந்தி மாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது.

இதனால் சிறு, சிறு வேலைகளுக்குச் சென்ற நிலையில் அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் எளிதில் பணம் சேர்த்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என இருவரும் தீர்மானித்தனர்.

அப்போது தான் கஞ்சாவை வாங்கி விற்கலாம் என இருவரும் முடிவு செய்தனர். அதன் மூலம் நல்ல பணம் கிடைக்கும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என முடிவு செய்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும் பிரகாஷ் கல்லூரியில் படிக்கும் போது அவரது நண்பர்கள் அவரை சூர்யா என்றே அழைத்து வந்துள்ளனர். கஞ்சா விற்க ஆரம்பித்ததும், சூரிய பிரகாஷ் தனது பெயரை சூர்யா என்றே எல்லோரிடமும் கூறி வந்துள்ளார்.

இதே போன்று தனது காதலி பெயரையும் தமன்னா என்று மாற்றி கூறியுள்ளார். அதன் படி இருவரும் கோயமுத்தூரில், சூர்யா-தமன்னா என்ற பெயரிலே கஞ்சா விற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கோவை கிழக்கு பொலிசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

பொலிசார் மற்ற வாகனத்தை சோதனையிடும் போது, இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து, அவர்களின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, உள்ளே 2 கிலோவிற்கு மேல் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் பின் இவர்களை கைது செய்துள்ள பொலிசார், தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.