கிளிநொச்சியில் 3 பிள்ளைகளின் தந்தை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கிளிநொச்சி புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் நேற்று காணாமல் போயிருந்தார்.

குறித்த அனர்த்தம் நேற்று பிற்பகல் இடம்பெற்று நிலையில், தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் அதன் போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அயலில் உள்ள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றும் தேடுதல் இடம்பெற்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் காணாமல் போயிருந்த குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த நபர் பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்துலிங்கம் அருமைநாதன் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பி்ல் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.