யாழில் மேலும் ஒரு கொரோனா மரணம்!

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி யாழ்.பருத்தித்துறை சேர்ந்த 68 ஒருவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.